ஸ்டெர்லைட் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் தாக்கல் செய்யவேண்டியிருந்தால், வரும் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு தேசிய பசுமை தீப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுவாயு கசிவு ஏற்பட்டதால் நகரத்தில் உள்ள மக்கள் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஆலை மூடப்பட்டது.
இதனையடுத்து ஆலையை இயக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், ஆலையின் பரிசோதனை இயங்கங்களின் போது எந்த அளவுக்கு கந்தக டை ஆக்சைடு வெளிவரும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது வெளிப்புறத்தில் உள்ள காற்றின் மாசு தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications