தமிழக ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட்டுக்கு இனி தனி வரிசை
சென்னை: தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சொந்த பயணத்துக்காக தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் திருவிழாக் காலங்களில்தான் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. தற்போது அனைத்து நாட்களிலும் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் நேற்று தட்கல் டிக்கெட் பெறுவதற்காக வந்திருந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சொந்த பயணத்துக்காக வந்தவர்களுக்கு 4 கவுண்டர்களும், பிரதிநிதிகளுக்காக வந்தவர்களுக்கு ஒரே ஒரு கவுண்டரும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி சொந்த பயணத்துக்காக வந்தவர்கள் 98 பேருக்கும் பிரதிநிதிகளுக்காக வந்தவர்களில் 27 பேருக்கும் டிக்கெட்டுகள் கிடைத்தன.
இதே போன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தவர்களில் 70 சதவீதம் பேர் சொந்த பயணத்திற்காக வந்தவர்கள் என்றும், 30 சதவீதம் பேர் பிரதிநிதிகளுக்காக டிக்கெட் எடுக்க வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இந்த முறையின்படி சொந்த பயணத்திற்கு வந்தவர்கள் அதிக பயன் அடைந்துள்ளதால், பயணிகள் மத்தியில் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications