தமிழக ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட்டுக்கு இனி தனி வரிசை
சென்னை: தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சொந்த பயணத்துக்காக தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
முன்பெல்லாம் திருவிழாக் காலங்களில்தான் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது. தற்போது அனைத்து நாட்களிலும் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரயில் நிலையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் நேற்று தட்கல் டிக்கெட் பெறுவதற்காக வந்திருந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சொந்த பயணத்துக்காக வந்தவர்களுக்கு 4 கவுண்டர்களும், பிரதிநிதிகளுக்காக வந்தவர்களுக்கு ஒரே ஒரு கவுண்டரும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி சொந்த பயணத்துக்காக வந்தவர்கள் 98 பேருக்கும் பிரதிநிதிகளுக்காக வந்தவர்களில் 27 பேருக்கும் டிக்கெட்டுகள் கிடைத்தன.
இதே போன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தவர்களில் 70 சதவீதம் பேர் சொந்த பயணத்திற்காக வந்தவர்கள் என்றும், 30 சதவீதம் பேர் பிரதிநிதிகளுக்காக டிக்கெட் எடுக்க வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இந்த முறையின்படி சொந்த பயணத்திற்கு வந்தவர்கள் அதிக பயன் அடைந்துள்ளதால், பயணிகள் மத்தியில் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications