எப்படி தயாராகிரது ஸ்டெம் செல்...?
வாஷிங்டன்: உடலின் எந்த பாகத்தையும் உருவாக்கும் வல்லமையுள்ள ஸ்டெம் செல்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இச்செல்கள் மூலம் எதிர்காலத்தில் செயற்கையாக மனிதர்களைக் கூட உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஓரிகான் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் இருந்து செல் பகுதிகளை எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
இதன் மூலம் சிகிச்சை, நோயாளியின் நோயை அறிதல் மற்றும் மருந்து கொடுத்தல் ஆகியவை எளிதாக அமையும்.
சரி, இந்த ஸ்டெம் செல்லை விஞ்ஞானிகள் எப்படிஉருவாக்கி பயன் படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா...

தோலை வெட்டி...
அல்செய்மர் , இதய நோய் மற்றும் இன்னபிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் இருந்து சிறு பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது.

கருமுட்டை...
ஆரோக்கியமான பெண்ணின் கருமுட்டையிலிருந்து மரபணு நீக்கப்படுகிறது.

மின்சாரம் பாய்ச்சி...
வெட்டிய செல் பகுதியை கருமுட்டைக்குள் வைத்து மின்சாரம் பாய்ச்சி பகுக்கப்படுகிறது.

குண்டூசி தலை மாதிரி...
அது 4 அல்லது 5 நாட்களில் 150 செல்களாக அது மாறுகிறது. இது பார்ப்பதற்கு குண்டூசியின் தலைப்பகுதி அளவிற்கு காணப்படுமாம்.

எந்த செல்லாகவும் மாற்றலாம்...
இந்நிலையில் ஸ்டெம் செல் விஞ்ஞானிகளால் பிரித்தெடுக்கப்படுகிறது. இது உடலின் எந்த செல்லாகவும் மாறும் திரன் கொண்டது.

மூளை... இதயம்...
இந்த செல்களை நோயாளி மனிதனின் இதயம், நுரையீரல், மூளை அல்லது வேறு எந்த செல்லாகவும் மாற்றிக் கொள்ள இயலும்.

எளிதான சிகிச்சை...
இதன் மூலம் சிகிச்சை, நோயாளியின் நோயை அறிதல் மற்றும் மருந்து கொடுத்தல் ஆகியவை எளிதாக அமையும்.












Click it and Unblock the Notifications