இந்தியா வந்தார் சீன பிரதமர்: எல்லைப் பிரச்சனை குறித்து மன்மோகனுடன் பேச்சு

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை தீராத பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லைப் பகுதியில் சீன ராணுவம் சத்தமில்லாமல் நுழைந்து தவுலத் பெக் ஒல்தி பகுதியில் கூடாரங்களை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேசி இந்த பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டது. இங்கு பிரச்சனை நடந்து கொண்டிருந்த போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் 3 நாள் பயணமாக சீன பிரதமர் லீ கெகியாங் இன்று இந்தியா வருகிறார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இன்று மதியம் டெல்லியில் வந்திறங்கினார். அவர் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இன்று இரவு லீக்கு மன்மோகன் சிங் விருந்து கொடுக்கிறார்.
நாளை லீக்கு ராஷ்ட்ரபதி பவனில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் ராஜ்காட் சென்று காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதன் பிறகு அவர் மீண்டும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கிறது. அதன் பிறகு லீக்கு பிரதமர் மதிய விருந்து அளிக்கிறார். லீயை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர். லீ துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார்.
செவ்வாய்கிழமை தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பிறகு மும்பை செல்லும் அவர் டிசிஎஸ் அலுவலகத்திற்கு செல்கிறார். சீனா-ஜப்பான் இடையேயான இரண்டாவது போரின்போது இந்தியாவால் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட துவாரகாநாத் கொட்னிஸ் உறவினர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனா கட்டும் 3 அணைகளால் இந்தியாவுக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறையும் என்று இந்தியா அஞ்சுகிறது. ஆனால் தண்ணீரின் அளவு குறையாது என்கிறது சீனா. இந்நிலையில் இந்தியா வரும் லீயிடம் நதி நீர் ஆணையம் அமைக்க அல்லது நதி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications