இந்திய, சீன உறவில் புதிய அத்தியாயத்தை எழுதத் தயார்: சல்மான் குர்ஷித் அறிவிப்பு
டெல்லி: சீனாவுடனான உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், இந்திய லடாக் எல்லையில் சீனா அத்துமீறி கூடாரங்கள் அமைத்ததை அடுத்து, இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இன்று சீனாப்பிரதமர் லீ கெகியாங் இந்தியா வருகிறார்.
சீனப் பிரதமரின் இந்திய வருகை குறித்து, இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது:-
இரு நாடுகளிடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தும் அவைகளில் நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மேலும் சீனாவுடன் உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் நடந்து கொள்ள இந்தியா தயாரக இருக்கிறது என இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications