ஆந்திராவில் அடிக்கடி பெய்யும் ’500 ரூபாய்’ பணமழை: தொடரும் மர்மம்

Subscribe to Oneindia Tamil

நகரி: அரசு பஸ்சில் இருந்து திடீரென பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளால் ரோட்டில் சென்ற மக்கள் ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானார்களாம். பறந்து வந்த பணத்தைப் பொறுக்குவதில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு மோதல் ஏற்பட்டதாம். சினிமாவில் வருவது போல் கடைசியாக வந்த போலீசாருக்கு வெறும் 11 ஐநூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்ததாம்.

ஆந்திர மாநிலம், வரங்கல் மாவட்டம் பரசலா பஸ் நிலையத்தில் இருந்து அனுமகொண்டா என்ற ஊருக்கு சென்ற அரசு பஸ் ஒன்றில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து சாலையில் விழுந்தது. பஸ்ஸின் பின் இருக்கையில் இருந்த மர்ம நபர் யாரோ தான் இச்செயலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திடீரென 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து ரோட்டில் விழுவதைப் பார்க்க, பண மழை கொட்டுவது போல் இருந்ததாம். சாலையில் சென்ற பொதுமக்கள் பணத்தை பொறுக்குவதில் போட்டியிட்டனர்.

தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசாருக்கு அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் பொறுக்கிய 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததில், மொத்தம் 11 நோட்டுகள் மட்டுமே போலீஸ் வசம் சிக்கியது. ஆனால் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் ரோட்டில் பறக்க விடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இதே பரசலாவில் ஆட்டோவில் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை வீசி மர்ம மனிதர்கள் பண மழை பெய்ய விட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+