லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி: தா. பாண்டியன் பங்கேற்பு
லண்டன்: பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
ஹைட் பூங்காவில் துவங்கிய ஊர்வலம் மாலை 4 மணிக்கு வாட்டர்லூவை சென்றடைந்தது. மாலை 3 மணிக்கு வாட்டர்லூவில் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால் பேரணி சுமார் 1 மணி நேரம் தாமதமாகவே வாட்டர்லூவை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் முடிவு மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிய ஐ.நா. ஆகியவற்றை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகள் ஆகியவற்றை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.
பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மையப் பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை வேடிக்கை பார்த்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் கவனத்தை ஈர்த்தன. இதில் இந்தியாவில் இருந்து இந்திய கம்யூனிச கட்சியின் தலைவர் தா.பாண்டியன், உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன், உலகத் தமிழர் இயக்க தலைவர் பழ நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலரது உரைகள் திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
பேரணி மற்றும் பொதுக்கூட்ட புகைப்படங்கள்








-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications