ஜாக்கிரதை... இனி சேவை வரி கட்டாவிட்டால் 7 ஆண்டு கம்பி எண்ணனும்!

சேவை வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களை கைது செய்வதற்கு இதுவரை குறிப்பிட்ட சட்டம் இல்லை. எனவே, குற்றவாளிகள் எளிதாக தப்பித்து வந்தனர்.
ஆனால், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2013-ம் ஆண்டுக்கான நிதி மசோதா மூலம், சேவை வரி ஏய்ப்பாளர்களை கைது செய்வதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகள் சிறை...
இதன்மூலம், சேவை வரி கட்டாமல் ஏமாற்றும் நிறுவனத்தின் மேலாளர், செயலாளர் அல்லது இயக்குனரை கைது செய்யவும், வரி ஏய்ப்புத்தொகை ரு.50 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் முடியும். அதோடு அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
புதிய நிதி மசோதா...
இந்த ஆண்டின் நிதி மசோதாவில் 91-வது பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதன்படி மத்திய உற்பத்திவரி துறையில் சூப்பிரண்டு பதவி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம். 1944-ம் ஆண்டு மத்திய உற்பத்தி வரி சட்ட விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஜாமீனில் வெளிவரமுடியாது...
அதன்படி, வரி விதிக்க வேண்டிய பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சத்தைத் தாண்டினால், வரி ஏய்ப்பாளர்களை கோர்ட்டு வாரண்டு எதுவுமின்றி (ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப்பிரிவின் கீழ்) கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
400 கோடி சுங்கவரி ஏய்ப்பு....
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மட்டும் ரு.400 கோடி அளவுக்கு சுங்கவரி மற்றும் சேவை வரி ஏய்ப்பு நடந்துள்ளதை மத்திய நிதி அமைச்சகம் கண்டுபிடித்து உள்ளதாம். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை மறைமுக வரிகளில் ரூ.2,600 கோடி வரை ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வருவாய்த்துறை கண்டுபிடித்து உள்ளது.
பொதுமன்னிப்பும் உண்டு...
சேவை வரி ஏய்ப்பாளர்கள், வரி பாக்கியை ஒரே நேரத்தில் செலுத்த முன்வந்தால், அவர்களுக்கு அபராதமோ அல்லது காலதாமத கட்டணமோ இன்றி பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தையும் மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிமுகப் படுத்தியுள்ளது.
விரைவில் சலுகை....
2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது இந்த திட்டம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சேவை வரி செலுத்துவதற்காக பதிவு செய்துள்ள 17 லட்சம் பேரில் 7 லட்சம் பேர் மட்டுமே சேவை வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்து இருப்பதாகவும், அவர்களை கணக்கு தாக்கல் செய்ய ஊக்குவிப்பதற்காக இந்த வாய்ப்பு அளிக்கப்படுவதாக, ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுவே முதல்முறை...
சுங்கம் மற்றும் மத்திய உற்பத்தி வரி வரிசையில், சேவை வரி விதிமுறைகளும் திருத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications