தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த மூவர் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி பலி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அத்திப்புலியூரில் ஆள் இல்லா ரயில்வே கேட்டில் படுத்திருந்த 3 பேர் மீது பெங்களூர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியானார்கள்.
இதில் பலியான வினோத் கண்ணா அத்திப்புலியயூரைச் சேர்ந்தவர். சிவசங்கர் கானூரைச் சேர்ந்தவர். மற்றொருவரான சேகர் சே.மங்கலத்தைச் சேர்ந்தவர் ஆவார். கோவில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு தண்டவாளத்திலே படுத்து உறங்கிய போது இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியில் மூழ்கிய மாணவர்கள்
இதேபோல் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அர்ஜுனன்(16), சந்தோஷ்(17) சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர்கள் ஆவார். உறவினர் ரவி என்பவரின் திருமணத்திற்காக குமாரபாளையம் சென்றிருந்த நேரத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்வம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இதற்கு மாணவர்களின் கவனக்குறைவே காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications