Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீ அஹோபில மடத்தின் 45 வது ஜீயர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: ஸ்ரீ அஹோபில மடத்தின் 45-வது ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகா சேவகா ஸ்ரீவந் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகா தேசிகன் அவர்கள் ஸ்ரீரங்கத்தில் நேற்று முக்தியடைந்தார். அவரது உடல் பக்தர்களிள் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஜீயரின் மறைவினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா வருத்தமும், மனவேதனையும் அடைந்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது

அஹோபில மடத்தின் 45 வது ஜீயராக 1992 ம் ஆண்டு பொறுப்பேற்ற ஸ்ரீவந் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகா தேசிகன் அவர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆன்மீகத்தை பரப்பி, சிழயர்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஊட்டிய பெருமைக்குரியவர்.

ஸ்ரீவந் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகா தேசிகன் அவர்களை இழந்து வாடும் அஹோபில மடத்தினருக்கும், சிஸ்ய கோடிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+