ஸ்ரீ அஹோபில மடத்தின் 45 வது ஜீயர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்
Subscribe to Oneindia Tamil

ஜீயரின் மறைவினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா வருத்தமும், மனவேதனையும் அடைந்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது
அஹோபில மடத்தின் 45 வது ஜீயராக 1992 ம் ஆண்டு பொறுப்பேற்ற ஸ்ரீவந் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகா தேசிகன் அவர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆன்மீகத்தை பரப்பி, சிழயர்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஊட்டிய பெருமைக்குரியவர்.
ஸ்ரீவந் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகா தேசிகன் அவர்களை இழந்து வாடும் அஹோபில மடத்தினருக்கும், சிஸ்ய கோடிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications