ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் தொடர்புடைய முக்கிய தரகர் பிரசாந்த் கைது
சென்னை: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சூதாட்ட தரகர் பிரசாந்த் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கினார்.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தொடர்புடைய தரகர்கள் 6 பேரை 3 தினங்களுக்கு முன்னர் சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்கள் 6 பேரும் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த முக்கிய தரகரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் இன்று பிரசாந்த் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது வீட்டில் மறைந்திருந்த அவர் போலீசிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவலில் விசாரிக்க மனு
இதனிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள 6 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications