சீமானை கைது செய்க... டி.ஜி.பியிடம் புகார் கொடுத்த இந்து மக்கள் கட்சி
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 18 ம் தேதி அன்று கடலூரில் நாம் தமிழர் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்தியாவில் பிரிவினையை தூண்டும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசி உள்ளார்.
தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர் தான் இந்த யாசின் மாலிக்.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள சீமான் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், அதற்கு துணை போன காங்கிரசுக்கு எதிராகவும் தமிழகத்தில் ஒருமித்த கருத்து உருவாகி வருகின்றது.
இந்த தருணத்தில், ஈழத்தமிழர் பிரச்சினையில் பின்னடைவு ஏற்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் பிரிவினை சக்தியை உருவாக்கும் வகையிலும் செயல்படும் சீமான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications