ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்: கொல்கத்தாவில் பிரபல புக்கீ உள்பட 9 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கொல்கத்தாவில் பிரபல தரகர் உள்பட 9 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகனும் அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மெய்யப்பனிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் பிரபல தரகர் அஜீத் சுரேகா உள்பட 9 தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 8 செல்போன்கள் மற்றும் பெட்டிங் செய்வதற்கான சாப்ட்வேர் உள்ள 2 லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications