கொல்கத்தா, டெல்லியில் ’மாம்பழத் திருவிழா’...:45 அரிய வகை மாம்பழங்கள் இடம்பெறுகிறது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மாம்பழ அமோக விளைச்சல் எதிரொலியாக கொல்கத்தா மற்றும் டெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது மேற்கு வங்காளத்தில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொல்கத்தா மற்றும் புதுடெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க வேளாண்மை துறை அமைச்சர் சுப்ரதா சாகா தெரிவித்துள்ளார்.
மாம்பழம் விளைவிப்போருக்கு தேவையான வணிக வாய்ப்புகள் கிடைக்க ஏதுவாகவும், பொது மக்களும் அரியவகை மாம்பழங்களை மலிவான விலையில் வாங்கி சுவைக்கவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

15 சதவீதம் உயர்வு...
மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டின் மாம்பழ விளைச்சல் முந்தைய ஆண்டை விட 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

7.23 டன் மாம்பழங்கள்...
முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட மாம்பழ விளைச்சல் அதிகம் உள்ள மாவட்டங்களில் இதுவரை 7.23 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியாகியுள்ளது.

மாம்பழக் கண்காட்சி...
இதனால் அரசு சார்பில் கொல்கத்தா மற்றும் புதுடெல்லியில் மாம்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

45 அரிய வகை மாம்பழங்கள்...
மால்டா மற்றும் முர்ஷிதாபாத்தில் விளையும் 45 அரியவகை மாம்பழங்கள் இந்த மாம்பழ கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது.

சுவையான வணிக வாய்ப்புகள்...
இந்தக் கண்காட்சி டெல்லியில் உள்ள பங்கா பவன், கொல்கத்தாவில் உள்ள சாகித் மினார் ஆகிய இடங்களில் ஜுன் 11 முதல் 15 நாட்கள் வரை நடைபெறும்.

ஒரே கல்லுல ரெண்டு மாம்பழம்...
'இந்த கண்காட்சியின் வாயிலாக மாம்பழம் விளைவிப்போருக்கு தேவையான வணிக வாய்ப்புகள் கிடைக்கும். பொது மக்களுக்கும் அரியவகை மாம்பழங்களை மலிவான விலையில் வாங்கி சுவைக்க முடியும்' என சுப்ரதா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications