வரதட்சனை கொடுமை: மும்பையில் வெப்கேமராவில் கணவர் கண் முன்பு தூக்கில் தொங்கிய இளம்பெண்
மும்பை: மும்பையில் வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் 27 வயது பெண் கணவர் வெப்கேமராவில் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள விலே பார்லேவைச் சேர்ந்த 27 வயது பெண் தனது காதலரை யாருக்கும் தெரியாமல் நீதிமன்றத்தில் வைத்து மணந்து கொண்டார். ஆனால் ரூ.20 லட்சம் வரதட்சனை கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று கூறி அப்பெண்ணை அவரது கணவரின் பெற்றோர் ஏற்க மறுத்து அனுப்பி வைத்துவிட்டனர்.
இதையடுத்து தனது பெற்றோரின் வீட்டில் இருந்து வந்த அவர் தனது கணவருடன் இன்டர்நெட்டில் வீடியோ சாட் செய்துள்ளார். கணவர் சாட்டிங்கில் இருக்கையிலேயே அப்பெண் தனது துப்பட்டாவை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை வெப்கேமராவில் பார்த்த அந்த நபர் தனது மனைவியின் குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
அதற்குள் அப்பெண் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் வரதட்சனை கொடுமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications