ராகுல் காந்தியின் குரு ஏ.கே. அந்தோணியாம்...
Subscribe to Oneindia Tamil

நேற்றோடு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது ஆட்சிக் காலத்தின் 4 ஆண்டு நிறைவடைந்தது. அதனையொட்டி, ஐ.மு. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது.
விருந்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்போது அவர் நீண்ட நேரமாக பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பு துறை அமைச்சரிடம் இவ்வளவு நேரமாக என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்? என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, 'ஏ.கே.அந்தோணியை எனது குருவாக கருதுகிறேன். பொதுவான விஷயங்கள் குறித்து அவருடன் விவாதித்தேன். அரசியல் நிலைமைகள் பற்றி பேசினோம்' என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications