மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து - மத்திய அரசு முடிவு

இதுதொடர்பான முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த முடிவைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்துக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைக்கிறது. இருப்பினும் இந்த முடிவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரே அமலுக்கு வரும்.
மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து தரும் முடிவை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த முடிவின் மூலம் மலையாள மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 100 கோடி வரை செலவிடும்.
இந்தியாவில் தற்போது சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் செம்மொழி அந்தஸ்தில் உள்ளன. தமிழுக்கு 2004ல் செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது. 2008ல் தெலுங்குக்குத் தரப்பட்டது. அதேபோல கன்னடத்திற்கும் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications