மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீசார் சோதனை: சிக்கியது என்ன?
Subscribe to Oneindia Tamil

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் நேற்று முன்தினம் இரவு மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மும்பையில் இருந்து 4 போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை சென்னை வந்தது.
அந்த குழுவினர் சென்னையில் உள்ள மெய்யப்பனின் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் 4 கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக மும்பை போலீசார் கடந்த 23ம் தேதி மெய்யப்பனைத் தேடி அவரது சென்னை வீட்டுக்கு வந்தபோது அவர் இல்லாததால் சம்மனை வீட்டில் ஒட்டிவிட்டு வந்தனர். அதன் பிறகே மெய்யப்பன் மும்பை சென்று போலீசார் முன்பு ஆஜரானார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications