ரூ 3.5 கோடிக்கு ஏலம் போன உலகின் முதல் ‘ஆப்பிள்’
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: ஆரம்பத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட முதல் கம்யூட்டர் இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் நிறுவனம், 1976-ம் ஆண்டு முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கம்ப்யூட்டரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
ஆரம்பகாலத்தில், ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட இக்கம்யூட்டர், மரத்தினால் ஆன கீ போர்டுடன் அமைந்திருந்தது.
சமீபத்தில், இந்த ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் ஜெர்மனியில் பிரகர் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. கம்ப்யூட்டருடன் சேர்த்து ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீல் வோஷ்னியாக் ஆகியோர் கையெழுத்துடன் கூடிய கடிதமும் ஏலமிடப்பட்டது.
ரூ.3.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்த நபரின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட ஏல நிறுவனம் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications