மாவோயிஸ்டுகள் தாக்குதல் எதிரொலி: பாஜகவின் சிறை நிரப்பும் போராட்டம் ஒத்திவைப்பு!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணி மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி 27 பேர் பலியானதைத் தொடர்ந்து இன்று முதல் நடைபெற இருந்த நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஒத்திவைத்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக மே 27-ந் தேதி முதல் ஜூன் 2 -ந் தேதி வரை நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணியின் மீது 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 27 பேர் பலியாகினர். முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இன்று நடத்த திட்டமிட்டிருந்த மத்திய அரசுக்கு எதிரான நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஒத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்று வருகிறது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், மாவோயிஸ்ட் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக மாவோயிஸ்ட்டுகளின் இந்த தாக்குதல் அமைந்துள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தால் இன்று முதல் நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.
சென்னை வரும் வருண் காந்தி
தமிழக பாஜக சார்பில் சென்னை அண்ணா சாலையில் வரும் 30ம் தேதி மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த மறியல் போராட்டத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வருண் காந்தி கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications