குருநாத் மெய்யப்பன் மீதான புகார்களை விசாரிக்க மூவர் குழு: சீனிவாசன்

ஆலோசனை
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களும் நாடு முழுவதும் புக்கிகளும் கைது செய்யப்பட்டனர். இதில் சிக்கிய பாலிவுட் நடிகர் வின்து அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பி.சி.சி.ஐ. அதிகாரிகளையும் ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா, துணைத் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோரையும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மூவர் கமிஷன்
பின்னர் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் குற்றம் சாட்டப்பட்ட நபர் அல்ல. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே எனக்கு எதிராக பிசிசிஐ அமைப்பில் யாரும் போர்க்கொடி தூக்கவில்லை. என்னைப் பதவி விலகுமாறு யாரும் அச்சுறுத்தவோ, நெருக்கடி கொடுக்கவோ முடியாது. எனக்கு முழுமையான ஆதரவு இருக்கிறது. பி.சி.சி.ஐ.யில் உள்ள ஓர் உறுப்பினர் கூட என்னைப் பதவி விலகுமாறு கோரவில்லை. குருநாத் மெய்யப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷனின் இரண்டு உறுப்பினர்கள் ஐ.பி.எல். செயல்பாட்டுக் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மற்றொருவர் சுதந்திரமான உறுப்பினராக இருப்பார். இந்த செயல்பாட்டுக் கமிட்டியில் இப்போது அருண் ஜேட்லி, ராஜீவ் சுக்லா, சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் இருவர்தான் விசாரணைக் கமிஷனுக்கு நியமிக்கப்படுவார்கள். சில சுயநல சக்திகள் எங்களுக்கு எதிராக அவதூறுப் பிரசாரம் செய்கின்றன. தொலைக்காட்சிகள் உறுதிப்படுத்தாத செய்திகளையும் ஒளிபரப்புகின்றன என்றார் அவர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications