குருநாத் மெய்யப்பன் மீதான புகார்களை விசாரிக்க மூவர் குழு: சீனிவாசன்

ஆலோசனை
ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களும் நாடு முழுவதும் புக்கிகளும் கைது செய்யப்பட்டனர். இதில் சிக்கிய பாலிவுட் நடிகர் வின்து அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பி.சி.சி.ஐ. அதிகாரிகளையும் ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் ராஜீவ் சுக்லா, துணைத் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோரையும் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மூவர் கமிஷன்
பின்னர் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் குற்றம் சாட்டப்பட்ட நபர் அல்ல. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே எனக்கு எதிராக பிசிசிஐ அமைப்பில் யாரும் போர்க்கொடி தூக்கவில்லை. என்னைப் பதவி விலகுமாறு யாரும் அச்சுறுத்தவோ, நெருக்கடி கொடுக்கவோ முடியாது. எனக்கு முழுமையான ஆதரவு இருக்கிறது. பி.சி.சி.ஐ.யில் உள்ள ஓர் உறுப்பினர் கூட என்னைப் பதவி விலகுமாறு கோரவில்லை. குருநாத் மெய்யப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷனின் இரண்டு உறுப்பினர்கள் ஐ.பி.எல். செயல்பாட்டுக் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மற்றொருவர் சுதந்திரமான உறுப்பினராக இருப்பார். இந்த செயல்பாட்டுக் கமிட்டியில் இப்போது அருண் ஜேட்லி, ராஜீவ் சுக்லா, சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் இருவர்தான் விசாரணைக் கமிஷனுக்கு நியமிக்கப்படுவார்கள். சில சுயநல சக்திகள் எங்களுக்கு எதிராக அவதூறுப் பிரசாரம் செய்கின்றன. தொலைக்காட்சிகள் உறுதிப்படுத்தாத செய்திகளையும் ஒளிபரப்புகின்றன என்றார் அவர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications