சென்னை தியாகராயநகர் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பல கோடி ரூபாய் பொருட்கள் சேதம்
சென்னை: சென்னையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சென்னை தியாகராய நகர் ஜி.என் செட்டி சாலையில் உள்ள புகன் டவரில் இன்று மதியம் 12.45 மணிக்கு திடீரென்று தீ பற்றியது. 5 வது மாடியில் பற்றிய தீ மூன்று தளங்களுக்கு பரவியது. ஏசியில் ஏற்பட்ட மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரி கார்த்திக்கேயன் தகவல் தெரிவித்தார்.
மூன்றாவது தளத்தில் உள்ள மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தீ அணைக்கப்பட்டாலும் புகையினால் வணிக வளாகத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ விபத்தினால் பொருட்சேதம் அதிகம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications