தகிக்கும் வெயில்... புதுச்சேரியில் ஜூன் 10ல் பள்ளி திறப்பு
புதுச்சேரி: கோடை வெப்பம் கொளுத்துவதால் புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் பள்ளி திறப்பு தேதியை மாற்றி அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.
கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 10 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு குழு அமைக்க உள்ளது எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ப்ளஸ் 1 தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு ஜுன் 10 முதல் மறுதேர்வு நடைபெற உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications