நில மோசடி.. சென்னையில் சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் திடீர் கைது!
சென்னை: நில மோசடி வழக்கில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் செயலாளரும் சசிகலாவின் அண்ணன் மகனுமான டாக்டர் வெங்கடேஷ் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ். இவர் அதிமுகவில் ஒரு கட்டத்தில் கோலோச்சி வந்தார். அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். பின்னர் அவர் அப்பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அப்படியே அதிமுகவில் ஓரமும் கட்டப்பட்டார். சசிகலா கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்த போது டாக்டர் எஸ்.வெங்கடேஷ் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் நில மோசடி புகார் தொடர்பாக சென்னை அடையாறில் இருந்த டாக்டர் வெங்கடேஷை தஞ்சாவூர் போலீசார் திடீரென இன்று கைது செய்தனர். சசிகலாவின் உறவினர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications