சேலத்தில் சாகசத்திற்கு பரிசாக இளைஞர் கைது: பாம்பு விடுதலை
சேலம்:பாம்புகளை வைத்து சாகசம் நிகழ்த்திய இளைஞரை கைது செய்தனர் வனத்துறையினர். பாம்புகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவற்றை பத்திரமாக காட்டிற்குள் விட்டனர்.
சேலம் அம்மாப்பேட்டை சிவாஜி நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் ஒருவர் பாம்புகளை வைத்து சாகச நிகழ்ச்சி நடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சேலம் தெற்கு வனச்சரகர் சிவகுமார், வனவர் வி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில், தகவல் உண்மை என தெரிய வந்தது. பாம்புகளை வைத்து நடனமாடிக் கொண்டிருந்த மரவனேரி கே.ஏ.எஸ். நகரைச் சேர்ந்த ஜே.பிரேம்குமார் (27) என்பவரை வனத்துரையினர் வளைத்துப் பிடித்தனர். அவரிடம் இருந்து மலைப் பாம்பு, சாரைப் பாம்பு, நாகப் பாம்பு என நான்கு பாம்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட பாம்புகள், வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அட்டவணையில் இடம் பெற்றுள்ளன என்பது தெரிய வந்தது.இந்த வகை பாம்புகள் காட்டில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த பாம்புகளை யாரும் பிடிக்கவோ, வீட்டில் வைத்திருக்கவோ, சாகச நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற காரியங்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்.
இதனால், சட்டத்திற்கு புறம்பாக பாம்புகளை வைத்திருந்த குற்றத்திற்காக பிரேம்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர். பிரேம் குமார் வைத்திருந்த பாம்புகளை வனவர் வி.பி.சுப்பிரமணியம், காப்பாளர்கள் சி.ராஜகோபால், சி.கோபி ஆகியோர் ஏற்காடு மலைப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications