என் மீதான பாஜகவின் நடவடிக்கை முட்டாள்தனமானது: ராம்ஜெத்மலானி சீற்றம்!

பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நிதின் கட்காரி இருந்த போது அவருக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர் ஜெத்மலானி. ஊழல் புகாரில் சிக்கிய அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியவர் ஜெத்மலானி. மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையே பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஜெத்மலானியும் பதில் அனுப்பியிருந்தார். ஆனாலும் பாஜக அமைதியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து அண்மையில் அத்வானி வீட்டில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் நுழைந்து பேசிய ஜெத்மலானி, தாம் பதிலளித்துவிட்ட பிறகும் இன்னமும் ஏன் என்னை நீக்காமல் வைத்திருக்கிறீர்கள்? என்று கொந்தளித்துவிட்டு வெளியேறினார். இதைத் தொடர்ந்து அவர் 6 ஆண்டுகாலம் பாஜகவில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம்ஜெத்மலானி. கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதிய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம். அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை.
நான் தொடங்கிய கருப்பு பண விவகார பிரச்சாரம் அவர்களை வெட்கப்பட வைத்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வரக்கோரி காங்கிரசுக்கு எதிரான எனது கோரிக்கைகளுக்கு கட்சியிலே ஆதரவு இல்லை. மேலும் என் மீது எடுத்துள்ள இந்த முட்டாள் தனமான நடவடிக்கையால் பாஜக அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த முட்டாள்தனமான நடவடிக்கையால் அவர்கள் பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகிறார்கள் என்றார் அவர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications