மெய்யப்பன் விவகாரம் - பிசிசிஐ விசாரணைக் குழு அறிவிப்பு - சீனிவாசன் நிறுவனமும் விசாரிக்கப்படும்!
டெல்லி: ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கமிஷனின் உறுப்பினர்களை வாரியம் முறைப்படி அறிவித்துள்ளது.
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்தொடர்பாக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீ்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து சீனிவாசனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து குருநாத் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்படும் என்று சீனிவாசன் அறிவித்தார். இந்தக் குழுவில் ரவி சாஸ்திரி இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தற்போது சாஸ்திரி இடம் பெறவில்ல. மாறாக வேறு 3 பேர் கொண்ட குழுவை வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட்வாரிய செயலாளர் சஞ்சய் ஜெகாதாலே, கர்நாடக மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய ஜெயராம் செளதா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கமிஷன், குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்கும். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளரான ஜெய்ப்பூர் ஐபிஎல் பிரைவேட் லிமிட்டெட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 3 பேர் கமிஷனின் விசாரணை தொடங்கும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications