மெய்யப்பன் விவகாரம் - பிசிசிஐ விசாரணைக் குழு அறிவிப்பு - சீனிவாசன் நிறுவனமும் விசாரிக்கப்படும்!
டெல்லி: ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கமிஷனின் உறுப்பினர்களை வாரியம் முறைப்படி அறிவித்துள்ளது.
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்தொடர்பாக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீ்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து சீனிவாசனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து குருநாத் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்படும் என்று சீனிவாசன் அறிவித்தார். இந்தக் குழுவில் ரவி சாஸ்திரி இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தற்போது சாஸ்திரி இடம் பெறவில்ல. மாறாக வேறு 3 பேர் கொண்ட குழுவை வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட்வாரிய செயலாளர் சஞ்சய் ஜெகாதாலே, கர்நாடக மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய ஜெயராம் செளதா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கமிஷன், குருநாத் மெய்யப்பன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்கும். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரான இந்தியா சிமென்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளரான ஜெய்ப்பூர் ஐபிஎல் பிரைவேட் லிமிட்டெட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் 3 பேர் கமிஷனின் விசாரணை தொடங்கும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications