மாப்பிள்ளை அட்டை கருப்பாக இருக்கார்: தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மணமகன் கருப்பாக இருந்ததால் அவரை மணக்க மணப்பெண் மறுத்துவிட்டார்.
உத்தர பிரதேசம் மாநிலம் ரே பரேலி நகர் அருகே உள்ள புர்சத்கஞ்ச் கிராமத்தில் நேற்று திருமணம் ஒன்று நடப்பதாக இருந்தது. திருமணத்திற்கு மணமகனின் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் மணமகள் ஊரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்தனர். மணமகனின் குடும்பத்தார் ஹராய்யா கிராமத்தில் இருந்து வந்தனர். மணமக்கள் அக்னியை வலம் வருவதற்கு முன்பு மணப்பெண் மணமகனை பார்த்தார்.
உடனே தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். என் அழகுக்கு ஏற்றது போல் மாப்பிள்ளை இல்லை என்றும், அவர் கருப்பாக இருப்பதால் மணக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மணப்பெண்ணை அவரது குடும்பத்தார் சமாதானம் செய்ய முயன்றும் அவர் கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
மாப்பிள்ளை வீட்டார் பிரச்சனை செய்யலாம் என்று அஞ்சிய கிராமத்தினர் போலீசாரை வரவழைத்தனர். மணமகன் கருப்பாக இருப்பதால் திருமணம் நின்று போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications