அமெரிக்கா: 3 இந்தியர்களுக்கு ‘சாம்பியன் ஆப் சேஞ்ச்’ விருது

அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டினரைப் பாராட்டும் வகையில் பல்வேறு துறைகளில் மிகத் திறம்பட பணியாற்றியவர்களை தேர்வு செய்து 'புதிய மாற்றத்தை உருவாக்கிய சாதனையாளர்' (சாம்பியன் ஆப் சேஞ்ச்) என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான விருதுக்கு 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் இந்தியர் எனத் தெரிய வந்துள்ளது. இவர்களில் சாரதா அகர்வால் (சிகாகோ), ரித்மான் தாஸ் (கன்சாஸ்), அமர் சவானி (மசாஷூசெட்ஸ்) ஆகிய 3 பேரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆவார்கள்.
வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டவர்கள் என்று அமெரிக்க அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அமெரிக்க தொழில்நுட்ப தலைமை அதிகாரி தோட்பார்க், 'அமெரிக்க சமுதாயத்துக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரம் வளர்ச்சி ஆகியவை மேம்பட உழைத்த இவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பதில் பெருமை கொள்கிறோம்' என கூறியுள்ளார்..












Click it and Unblock the Notifications