சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு காங். மூத்த தலைவர் அஜித்ஜோகி உடந்தை- ம.பி. பாஜக புகார்!
போபால்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடந்தை என்று மத்திய பிரதேச பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மே 25-ந் தேதியன்று மாவோயிஸ்டுகள் நடத்திய பெரும் தாக்குதலில் அம்மாநிலத்தின் மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 28 படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு காங்கிரஸின் ஒரு பிரிவினர்தான் காரணம் என்று படுகொலை செய்யப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் மகேந்திர கர்மாவின் மகன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் மத்திய இரதேச மாநில செய்ற்குழுக் கூட்டத்தில் பேசிய் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நரேந்திர சிங் டோமர், பாஜகவின் தேசிய செயலர் அனந்த் குமார், மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான் ஆகியோர் அனைவரும் பகிரங்கமாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிதான் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு உடந்தை என குற்றம்சாட்டினர். அம்மாநிலத்தின் மூன்று முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதால்தான் தாம் இந்த சந்தேகத்தை கிளப்பியிருப்பதாக நரேந்திர சிங் டோமர் கூறினார். மேலும் சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்படாத நிலையில் ஒருங்கிணைந்த மத்திய பிரதேச சட்டசபையில் தாம் மகேந்திர கர்மாவுடன் இணைந்து பணியாற்றியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அனந்த்குமார், சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங், அஜித் ஜோகி ஆகியோர்தான் ஆதரவு. 2010ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகள் 76 சி.ஆர்.பி.எப். வீரர்களை தண்டேவடாவில் படுகொலை செய்தபோது அவர்களை அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், அவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருந்தார். ஆனால் ஜோகியும் திக்விஜய்சிங்கும் கொடுத்த அழுத்தத்தினால் அந்த வார்த்தைகளை முழுங்கிவிட்டார் ப.சிதம்பரம் என்றார்.












Click it and Unblock the Notifications