கருணாநிதி பிறந்த நாள்... முக ஸ்டாலின் இன்று ரத்த தானம்!

அவரது தலைமையில் ஏராளமான தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தானும் ரத்தம் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், " தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் 3 மாதங்கள் கொண்டாடப்படும். விழாவையொட்டி ரத்த தானம், கண் தானம், அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்," என்றார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு துணை அமைப்பாளர்கள் கே.கே.நகர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, ஆனந்தம், நுங்கை சுரேஷ், வடிவேல், எம்.கே.ஆனந்த் உள்பட 100 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், இளைஞரணி மாநில துணை செயலாளர் மா.சுப்பிரமணியன், பகுதி செய லாளர்கள் மதன்மோகன், மா.பா.அன்புதுரை, வி.எஸ்.ராஜ், அகஸ்டின்பாபு உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ராயப்பேட்டை மைதானத்தில் 3-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்த மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி, தொல்.திருமாவளவன், காதர் மொய்தீன், ஆர்.எம். வீரப்பன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பாராட்டி பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications