கோடிகோடியாய் குவித்த சஞ்சய்தத்தின் ஒருநாள் சம்பளம் ரூ 25...
புனே: கோடி கோடியாய் சம்பாதித்த நடிகர் சஞ்சய்தத் தற்போது ஜெயிலில் நாளொன்றுக்கு ரூபாய் 25 முதல் 40 வரை கிடைக்கும் பேப்பர் பை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நடிகர் சஞ்சய் தத் தற்போது, சிறைத்தண்டனை பெற்று, ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இன்னும் மூன்று ஆண்டுகள் சஞ்சய்தத் இருந்தாக வேண்டும்.
பொதுவாக சிறைக்கைதிகள் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது நியதி. அதன்படி, சஞ்சய் தத்துக்கு அங்கு 'பேப்பர் பைகள்' தயாரிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. முறையான பயிற்சிக்கு பிறகு பேப்பர் பைகளை தயாரிப்பதன் மூலம், சஞ்சய் தத் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் 25 முதல் 40 வரை வருமானம் ஈட்டலாமாம்.

அதிகரிக்கும் வருமான வாய்ப்பு...
திறமை மற்றும் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக அவரது வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.

எப்படி இருந்த நான்...
தனது உடலுக்கு ஏற்றவாறு, கடினமான வேலை வேண்டும் என்று சஞ்சய் தத் வேண்டுகோள் வைத்தும், அதை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனராம்.

படிப்படியா முன்னேறலாம்...
முதற்கட்டமாக பேப்பர் பை தயாரிக்கும் சஞ்சய் தத், பின்னர் படிப்படியாக மரச்சாமன்கள், மெழுகுவர்த்தி, பைகள் தயாரிப்பார். இவை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வெளியில் விற்கப்படும் என தெரிகிறது.

இலவச விழிப்புணர்வு...
சஞ்சய் தத்தை பேப்பர் பை செய்ய வைத்து இலவசமாக விளம்பரம் செய்து, பிளாஸ்டிக் பைகளை ஒழித்து விடலாம் என திட்டம் தீட்டுகிறதா அரசு....












Click it and Unblock the Notifications