பஞ்சாபில் நர்ஸிங் மாணவியை இயற்கைக்கு புறம்பான முறையில் கற்பழித்த ஏட்டு கைது
சண்டிகர்: பஞ்சாபில் 23 வயது நர்ஸிங் மாணவியை ஏட்டு ஒருவர் இயற்கைக்கு புறம்பான முறையில் கற்பழித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ஏட்டாக இருப்பவர் நவல் கிஷோர். அவர் கடந்த சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் காந்தி பார்க்கிற்கு வந்தபோது பெரோஸ்பூர் மிஷன் மருத்துவமனையில் நர்ஸிங் படிக்கும் 23 வயது இளம்பெண்ணும், வாலிபரும் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.
அவர்கள் மாணவர்கள் என்பதை விசாரித்து தெரிந்து கொண்ட கிஷோர் அவர்கள் கல்லூரியில் முறையான அனுமதி பெறாமல் வெளியே வந்திருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார். இதையடுத்து அந்த வாலிபரை அனுப்பி வைத்து விட்டு அந்த மாணவியை மட்டும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை இயற்கைக்கு புறம்பான முறையில் கற்பழித்தார்.
இதையடுத்து அந்த மாணவி கொடுத்த புகாரின்பேரில் கிஷோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications