தமிழ்நாடு கேட்கும் போதெல்லாம் காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராய்சூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அவர் சிந்தனூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. கர்நாடகத்தில் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தபோது கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். எங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது கேட்டால் எங்களால் திறந்துவிட முடியாது.
காவிரி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி நிலவுவதால் அங்குள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்தபட்ச அளவை விட குறைவாக உள்ளது. அதனால் தற்போதைக்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடக மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கே தண்ணீர் போதிய அளவு இல்லை.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வறட்சி நிலை இன்னும் சில வாரங்களில் மாறும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 2 நாட்களாக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு கேட்கும் போதெல்லாம் தண்ணீர் திறந்துவிட முடியாது என்றார்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா இந்த மாதத்தில் முதல் 20 நாட்களில் 1.2 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications