ஏன் போன் பண்ணலை... 45 வயது கள்ளக்காதலியை கத்தியால் குத்திய 60 வயது முதியவர்!
சென்னை: தனது கள்ளக்காதலி செல்போனில் பேச மறுத்து விட்டதால் கோபமடைந்த 60 வயது முதியவர், கள்ளக்காதலியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
சென்னை அருகே திருமுல்லைவாயல் சீனிவாசா நகர் ராகவன் தெருவை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. 45 வயதானவர். இவரது கணவர் செல்வம் 15 வருடத்திற்கு முன்பே பிரிந்து போய் விட்டார். சாமுண்டீஸ்வரிக்கு பிள்ளை கிடையாது.
இந்தநிலையில் 60 வயதான நடராஜன் என்பவருடன் சாமுண்டீஸ்வரிக்குப் பழக்கம் ஏற்பட்டது.ஆனால் இந்தத் தொடர்பை சமீப காலமாக குறைக்க ஆரம்பித்தார் சாமுண்டீஸ்வரி. நடராஜன் விடாமல் போன் செய்வாராம். போனை எடுக்காமல் விட்டு விடுவாராம் சாமுண்டீஸ்வரி.
இந்த நிலையில் சாமுண்டீஸ்வரியைத் தேடி நடராஜன் நேரிலேயே வந்து விட்டார். ஏன் போனை எடுப்பதில்லை என்று கேட்டு சண்டை பிடித்தார். இதனால் கோபமடைந்த சாமுண்டீஸ்வரி, நடராஜனை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கோபமடைந்த நடராஜன், கத்தியை எடுத்து சாமுண்டீஸ்வரியை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்து கீழே விழுந்தார் சாமுண்டீஸ்வரி.
இதைப் பார்த்து பொதுமக்கள் ஓடிவரவே நடராஜன் தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் சாமண்டீஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடராஜன் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications