கல்யாணமாகலையே... தண்ணியைப் போட்டு ரயில் முன்பு பாய்ந்த வாலிபர்
ஈரோடு: 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் ஈரோட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடித்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன். 30 வயதாகும் இவர் வீட்டிலேயே கம்ப்யூட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார். இத்தனை வயதாகியும் தனக்குத் திருமணமகாவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார் மணிகண்டன்.
அவருக்கு வீட்டில் பல இடங்களில் பெண் பார்த்தும் எதுவும் செட் ஆகவில்லையாம். இதனால் பெரும் விரக்தி, சோகத்துடன் இருந்து வந்தார் மணிகண்டன்.
இந்தநிலையில் நேற்று வீட்டைவிட்டு வெளியேறி அவர் மது அருந்தினார். நன்கு மது அருந்தியஅவர் பின்னர் நேராக ரயில்வே நிலையப் பகுதிக்குப் போனார். அங்கு அந்த சமயத்தில்வந்த ரயில் முன்பு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தற்கொலைக்கு முன்பு 3 முறை அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து தப்பியவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications