டீச்சர் சீண்டுகிறாரா... புகார் பெட்டியில் மனு போடலாம்.. பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
திருவனந்தபுரம்: கேரளாவில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் கேரள போலீஸ் சார்பில் புகார் பெட்டி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீப காலமாக பள்ளிகளிலும், வேன், பஸ்களிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயந்து யாரிடம் மாணவிகள் சொல்வதில்லை. இதை பயன்படுத்தி கொண்டு பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்ததால் இது குறித்து நடவடிக்கை எடுக்க டிஜிபி பாலசுப்பிரமணியத்துக்கு கேரள உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் புகார் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க டிஜிபி பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதன்படி கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில் விரும்பதகாத சம்பவம் நடந்தாலும், ஆசிரியர்கள் அடித்தாலும் வேன்களில டிரைவர்கள், கீளினர்கள் பாலியல் தொந்தரவு செய்தாலும் இதுகுறித்து உடனடியாக மாணவிகள் புகாராக எழுதி பெட்டியில் போடலாம். இதன் மேல் ஒரு வாரததிற்குள் நடவடிக்கை எடுக்க.ப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டிஜிபி தெரிவிக்கையில், மாணவிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கவே பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்க தீர்மானிக்கப்பட்டது. பெற்றோர், ஆசிரியர்களிடம் சொல்ல தயங்கும் புகார்களை இதில் எழுதி போடலாம். இதன்மேல் ரகசிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications