நக்கீரன் மீது ஜெ. புதிய அவதூறு வழக்கு
சென்னை: நக்கீரன் பத்திரிக்கை மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் புதிய அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வக்கீல் ஜெகன் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில், நக்கீரன் இதழில் ஏப்ரல் 13ம் தேதி கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், ‘ஜெ ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை, தமிழகத்தை சுட்டெரிக்குது ஊழல்‘ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி, தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பொது மக்களிடையே உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500ன் கீழ் அவதூறு பரப்பியதாக கூறி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இது நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைககு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications