பின்லாந்தில் 290 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் டிசிஎஸ்!

பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் உள்ள டிசிஎஸ் நிறுவன அலுவலகத்தில் 800 பேர் பணியாற்றுகின்றனர்.
இதில் 290 பேரை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பின்லாந்து பொறியாளர்கள் சங்கத்துடன் (Union of Professional Engineers in Finland) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், உண்மையில் 412 பேரை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் முயல்வதாகவும், இந்தப் பணிகளை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் பொறியாளர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது.
இதை டிசிஎஸ் மறுத்துள்ளது. உண்மையில் 290 பேரை மட்டுமே நீக்க முடிவு செய்துள்ளதாக டிசிஎஸ் கூறுகிறது.
பணி நீக்கத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் டிசிஎஸ் நிறுவனத்தின் 160 பணியாளர்கள் வாக்-அவுட் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்களை நோக்கியா நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் அமர்த்தியிருந்தது.
பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்க டிசிஎஸ் நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்வதாக பொறியாளர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications