எங்கிருக்கிறாய் என் தாயே?... ஊர் ஊராக தேடி அலையும் மகன்!

மதுரையில் 25 இடங்களில் தனது அம்மாவின் படம் போட்ட ஃப்ளக்ஸ் அமைத்து, மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியும், பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளார் குமார்.
இதுபோக நண்பர் ஒருவரின் நானோ காரை இரவல் வாங்கி டிரைவிங் தெரிந்த இன்னொரு நண்பரை உடன் அழைத்துக் கொண்டு இன்னமும் அம்மாவைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்.
திருச்சிக்கு வந்த குமார் அங்கு நிருபர்களிடம் பேசும் போது அவ்வளவா வசதியில்லைன்னாலும் எங்களை நல்லபடியா கவனிச்சு வளர்த்தாங்க எங்க அம்மா. கடைசி காலத்துல அவங்கள நல்லபடியா பார்த்துக்கணும்னு நினைச்சிருந்த எங்களை ஏமாத்திட்டு எங்கோ போயிட்டாங்க. அவங்களுக்கு மனநலம் சரியில்லாததால் டாக்டர்ங்ககிட்ட காமிச்சு மருந்து வாங்கி கொடுத்தும், அதை சரியா சாப்பிடாம முரண்டு பிடிச்சாங்க.
ஒரு நாள் திடீரென வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனார்கள் என்று தெரிய வில்லை, இப்போ எங்கே? என்ன நிலைமையில் இருக்காங்கன்னு தெரியலையே? என்று குமார் சொல்லும்போதே அவரது கண்ணில் கண்ணீர் வருகிறது.
குமாரின் தாயார் குறித்தத் தகவல் தெரிந்தால் அழைக்க வேண்டிய எண் 9786965053.












Click it and Unblock the Notifications