எங்களுக்கும் ஓட்டுப் போட ரைட்ஸ் உண்டு.. சொல்கிறார் தேமுதிக சந்திரகுமார்
சென்னை: சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முழு உரிமை உள்ளது என்று கூறியுள்ளார் தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார்.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பிக்களுக்குப் பதில் புதிய எம்.பிக்களைத் தேர்வு செய்ய ஜூன் 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யலாம். அதிமுகவின் ஆதரவுடன் தோழமைக் கட்சி சார்பில் ஒருவரைத் தேர்வு செய்யலாம். இன்னொரு இடத்தை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பெற முடியும். அதாவது திமுகவும், தேமுதிகவும் சேர்ந்து சந்தித்து வெல்லலாம்.
ஆனால் இதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவில் பெரும் கலகத்தை ஏற்படுத்தி வி்ட்டனர். அக்கட்சிக்கு 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் 6 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர். 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்று தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராஜ்யசபா தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போட உரிமை உண்டு. ஆனால் சட்டசபை வளாகத்துக்கு செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்பதை தேர்தல் கமிஷன்தான் விளக்க வேண்டும்.
ஏற்கனவே 2010ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற ஒரு நிலை வந்தது. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை ஓட்டு போட அனுமதிக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சட்டசபையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களை ஓட்டு போட செய்வதற்கு சட்டசபையை கூட்டி தீர்மானம் போட வேண்டும் என்று அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், சஸ்பெண்ட் எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்திற்கு சென்று ஓட்டு போடாத நிலை ஏற்பட்டது. அதுபோன்ற ஒரு நிலையை இங்கு ஏற்படுத்தவே அதிமுக அரசு நினைக்கும்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. எனவே தேர்தலில் எங்கள் நிலை என்ன என்பதை எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.
-
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!












Click it and Unblock the Notifications