For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகை ஜியா கான் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த 5ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் 12 வயது மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள குருநானக் பஸ்தியைச் சேர்ந்தவர் பாபு(12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த திங்கட்கிழமை இரவு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின் மரண செய்தியை செவ்வாய்கிழமை திரும்பத் திரும்ப டிவியில் பார்த்துள்ளார்.

'Shocked' by Jiah Khan's death, boy commits suicide in Jaipur

இதையடுத்து அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜியா கான் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜியா கான் மரணம் அவரை வெகுவாக பாதித்ததால் தான் பாபுவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.

English summary
A twelve-year-old boy has allegedly committed suicide by hanging himself from a ceiling hook in Sriganganagar city with family members claiming he was apparently upset over actress Jiah Khan's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X