ஜூன் 11 முதல் மன்னார்குடி- கோவை இடையே ’செம்மொழி’: புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

மன்னார்குடி முதல் கோவை வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த சில காலமாக பொது மக்களும், வணிகர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், மன்னார்குடி முதல் கோவை வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மேலும், இந்த ரயிலுக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புதிய ரயில் போக்குவரத்து வரும் ஜூன் 11 ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
வரும் ஜூன் 11 ம் தேதி துவக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16615), மன்னார்குடியிலிருந்து மாலை 8.10 க்கு புறப்பட்டு, கோயமுத்தூருக்கு மறுநாள் காலை 5 மணிக்கு செல்லும். அதே போல,கோயமுத்தூரிலிருந்து (எண் 16616) இரவு 11.55க்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.55 மணிக்கு மன்னார்குடி செல்லும்.
இந்த எக்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில், நிடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இந்த புதிய ரயிலுக்கு பொது மக்களும், வணிகர்களும், ரயில் பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications