ஜூன் 11 முதல் மன்னார்குடி- கோவை இடையே ’செம்மொழி’: புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

New train linking Coimbatore and Mannargudi to be launched
மன்னார்குடி: மன்னார்குடி முதல் கோவை வரை , செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் எனும் புதிய ரயில் போக்குவரத்து வரும் ஜூன் 11 ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

மன்னார்குடி முதல் கோவை வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த சில காலமாக பொது மக்களும், வணிகர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், மன்னார்குடி முதல் கோவை வரை புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மேலும், இந்த ரயிலுக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புதிய ரயில் போக்குவரத்து வரும் ஜூன் 11 ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

வரும் ஜூன் 11 ம் தேதி துவக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16615), மன்னார்குடியிலிருந்து மாலை 8.10 க்கு புறப்பட்டு, கோயமுத்தூருக்கு மறுநாள் காலை 5 மணிக்கு செல்லும். அதே போல,கோயமுத்தூரிலிருந்து (எண் 16616) இரவு 11.55க்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 7.55 மணிக்கு மன்னார்குடி செல்லும்.

இந்த எக்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில், நிடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். இந்த புதிய ரயிலுக்கு பொது மக்களும், வணிகர்களும், ரயில் பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+