ஊதியம் கொடுக்க பணம் இல்லையே.. கிங்பிஷர் ஊழியர்களிடம் கைவிரித்த மல்லையா!
Subscribe to Oneindia Tamil

ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத அளவுக்கு நட்டத்தை எதிர்கொண்டது கிங்பிஷர் ஏர்லைன்ஸ். இதனால் அந்நிறுவனத்தின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்த் தமக்குச் சொந்தமான யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் மதுபான ஆலையின் பங்குகளை விற்று கிங் பிஷர் ஏர்லைன்ஸை புதுப்பிக்கவும் முயற்சித்துப் பார்த்தார் மல்லையா. ஆனாலும் பலன் இல்லை.
இதனால் பணிவாய்ப்பு இல்லை என உணர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மும்பையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கர்நாடக உயர்நீதிமன்ற்த்தில் தடையாணை உள்ளதால் என்னால் மதுபான ஆலையின் பங்குகளை விற்க முடியவில்லை. அதனால், உங்களுக்கு சம்பள பாக்கியை தர என் கையில் பணம் இல்லை என்று விஜய் மல்லையா கையை விரித்து விட்டார். இதனால் கடும் கொந்தளிப்பில் ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications