உடைபட வங்கதேசம் கிளம்பியது 6 பேரை காவு கொண்ட பிரதீபா காவேரி

Subscribe to Oneindia Tamil

Pratibha cauvery ship
சென்னை: நிலம் புயலின் போது தரை தட்டி நின்ற பிரதீபா காவேரி கப்பல் இன்னும் சில தினங்களில் உடைக்கப்பட உள்ளது. இதற்காக இன்று தனது கடைசிப் பயணத்தை தொடங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 21ல் சென்னையில் நிலம் புயல் தாக்கியபோது பிரதீபா காவேரி என்ற கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரை தட்டியது. இது சென்னை மக்களின் காட்சிப் பொருளானது. இந்த கப்பலில் இருந்து குதித்த 6 பேர் உயிரிழந்தனர்.

ஊதியம், இழப்பீடு சர்ச்சையில் சிக்கியதோடு கடல் பயண தகுதியையும் இழந்தது இந்த பிரதீபா காவேரி கப்பல்.35 டன் எடை கொண்ட பிரதீபா காவேரி கப்பலை ரூ.16 கோடிக்கு துபாய் நிறுவனம் வாங்கியது.

இதுநாள் வரை சென்னை துறைமுகத்தில் முடங்கி கிடந்த பிரதீபா கப்பல் துபாய் இழுவை கப்பலின் உதவியுடன் வங்கதேசத்திற்கு பயணத்தை தொடங்கியது. துறைமுகத்தின் 6 வது தளத்திலிருந்து பிரதீபா கப்பலை இழுவை கப்பல் இழுத்துச் சென்றது.

3 நாட்களில் சிட்டகாங் துறைமுகத்திற்கு செல்லும் இக்கப்பல் அங்கு உடைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+