கோவா கூட்டத்தில் அத்வானி கலந்துக்காம போனதுக்கு கடுமையான வயித்து வலிதான் காரணமாம்!

கோவா செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக மோடி அறிவிக்கப்படுவார் என்று உறுதியானதால் அத்வானி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடல்நிலை சரியில்லை என்று கூறி இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மோடியின் ஆதரவாளர்கள் டெல்லியில் அத்வானியின் வீட்டு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி மோடி பாஜகவின் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் எல்.கே.அத்வானியின் உரை ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அரசியல் எதுவும் பேசாத அத்வானி, அந்த உரையில் தமக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டிருப்பதை விளக்கினார். 11 நிமிடம் ஹிந்தியில் அத்வானி ஆற்றிய உரையில், ஜெய்ப்பூரில் இருக்கும் சாத்வி பிரீதி பிரியம்வதாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு நேரில் வர முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டேன். கடந்த மூன்று நாட்களாக எனக்கு கடுமையான வயிற்றுக் கோளாறு காரணமாக உடல் நிலை சரியாக இல்லை. இதனால் எங்கள் கட்சியின் மிக முக்கியமான தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications