கூடங்குளம் போராட்டக் குழுவுக்கு எதிராக ஆபாச சி.டி.: சுப.உதயகுமார் புகார்
நெல்லை: கூடங்குளம் போராட்டக் குழுவிற்கு எதிராக வெளியான ஆபாச சிடியை வினியோகம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்கு குழு தலைவர் சுப. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் குறிப்பாக இடிந்தகரையில் கடந்த 22 மாதங்களாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு தபால் மூலம் மர்ம நபர்கள் சி.டி.யை அனுப்பியுள்ளனர்.
அதில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெண்களிடம் அருவருப்பகவும், இரட்டை அர்த்தம் கொண்ட தொனியில் பேசுவது போன்றும் காட்சிகள் அமைந்துள்ளது. தபால் முத்திரை இல்லாமல் இந்த சி.டி. பார்சலை தபால் ஊழியர்கள் சிலரே பல பகுதிகளில் வினியோகம் செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்த சி.டி. காட்சியைப் பார்த்து போராட்டக் குழுவினர் மட்டும் இன்றி, கூடங்குளம் மற்றும் இடிந்தகரை கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் சுப.உதயகுமார் நெல்லை மாவட்ட முதுநிலை தபால் கோட்ட கண்கானிப்பாளருக்கு ஒரு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கூடங்குளம், இடிந்தகரையைச் சேர்ந்த மக்களுக்கு முத்திரை இல்லாத தபால்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதே போன்ற ஒரு கடிதத்தை எங்களுக்கும் இடிந்தகரையைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர் கொடுத்தார். அதில் எந்த தபால் நிலையத்தின் முத்திரையும் இல்லை.
ஆனால், அதில் இருந்த சி.டி.யில் எங்கள் போராட்டக்குழு நிர்வாகிகளை அவமானப்படுத்தும் விதத்தில் திட்டமிட்டு யாரோ அவதூறாக பேசி தயாரிக்கப்பட்ட பதிவு இடம் பெற்றுள்ளது.
தபால் அலுவலக முத்திரை இல்லாமல் அதனை விநியோகித்த தபால் ஊழியர் மீது உடனே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த சி.டி. சம்பவம் கூடங்குளம் மற்றும் இடிந்தகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications