மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் காயமடைந்த வி.சி.சுக்லா இன்று உயிரிழந்தார்!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரை மீது மாவோயிஸ்டுகள் மிகப் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சல்வா ஜூதும் அமைப்பை உருவாக்கிய அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உட்பட 28 பேர் பலியாகினர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா உள்ளிட்ட 35 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த வி.சி.சுக்லா டெல்லி குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மன்மோகன்சிங், மோடி, சோனியா இரங்கல்
வி.சி.சுக்லாவின் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications