Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் பிக்ஸிங்.. சென்னை ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ.பி.எல். பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனால் மே 30-ந் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் மும்பை போலீஸ் முன்பு விக்ரம் அகர்வால் இதே புகாருக்காக ஆஜராகி இருந்தார்.

பின்னர் கடந்த 5-ந் தேதி 5-ந் விக்ரம் அகர்வாலின் மனைவி வந்தனா சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தமது கணவர் ஆஜராவதற்கு ஒருவார கால அவகாசம் கோரினார். இதனால் விக்ரம் அகர்வால் 8-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினர். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் போலீசார் முன்பு விக்ரம் அகர்வால் ஆஜரானார்.அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். பின் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+