தருமபுரியில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை: மூவர் கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தருமபுரியில் பணத்திற்காக சிறுநீரகத்தை விற்க முயன்றவரையும், தரகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சட்ட விரோதமாக சிறுநீராக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்துசிறுநீரக தரகராக செயல்பட்ட அய்யாவு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கிராமங்களில் வறுமையில் வாடும் ஏழைகளை ஏமாற்றி சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதும், ஒரு சிறுநீரகத்தை ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை அய்யாவு விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக சட்ட விரோதமாக அவர் மனித சிறுநீரகங்களை விற்பனை செய்து வந்துள்ளார். வறுமையைப் பயன்படுத்தி கிராம மக்களிடம் சிறுநீரகத்தை சட்டத்திற்கு விரோதமான பெற்றுள்ளார் அய்யாவு.

இவ்வாறு பெறப்படும் சிறுநீரகங்களை அண்டை மாநிலமாக கர்நாடகாவிற்குச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் தரகர் அய்யாவு மூலம் தனது சிறு நீரகத்தை விற்பனை செய்ய முயன்றதால் அவரும் கைது செய்யப்பட்டார்.

சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டம் பெரியமணலியைச் சேர்ந்த மற்றொரு தரகர் ஸ்ரீநிவாசன் என்பவரையும், தருமபுரி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+